மாநிலங்களவையில் புதிய வருமான வரி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த திங்கள்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்துவிட்டன. எனவே புதிய சட்டம் தேவைப்படுகிறது.
இந்த மசோதாவில் புதிய வருமான வரி விகிதங்கள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. புதிய வருமான வரிச் சட்டத்தில் வாா்த்தைகள் எளிமையாக இருக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது’ என்றாா்.
அவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
Summary
Parliament passes new Income Tax Bill to replace IT Act
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா: மாநிலங்களவையில் அறிமுகம்
வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்
‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல்!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



