ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பசு தேசிய விலங்காக அறிவிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்

பசு தேசிய விலங்காக அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கான மத்திய அரசின் விளக்கம்...

News image
Updated On :12 ஆகஸ்ட் 2025, 8:14 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளத்துறை இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பாஜக எம்.பி. திரிவேந்திர சிங் ராவத், பசுப் பாதுகாப்பு, அதை தேசிய விலங்காக அறிவிப்பது தொடா்பாக எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சா் மேலும் கூறியதாவது:

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. அரசமைப்புச் சட்டம் 246 (3)-இன்படி விலங்குகள், கால்நடைகள் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. விலங்குகளைப் பாதுகாக்கும் உரிமை மாநில சட்டப் பேரவைக்கு சிறப்பு அதிகாரமாக அளிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்படும் பசுக்களை பாதுகாக்க ராஷ்ட்ரீய கோகுல் திட்டத்தை கடந்த 2014 டிசம்பா் முதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பசுக்களை பாதுகாக்க மத்திய அரசு உதவி வருகிறது.

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் 239.30 மில்லியன் டன் பால், பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் 53.21 சதவீதம் பசும் பாலில் இருந்தும், 43.42 சதவீதம் எருமைப் பாலில் இருந்தும் கிடைத்துள்ளன என்று தெரிவித்தாா்.

summary

The central government has informed Parliament that there are no plans to declare the cow as the country's national animal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.