பிகாரில் இண்டி கூட்டணித் தலைவா்களுடன் ராகுல் காந்தி வாக்குரிமைப் பேரணி: ஆக. 17-இல் தொடங்குகிறாா்
ஏ என் ஐ கோப்புப்படம்

பிகாரில் இண்டி கூட்டணித் தலைவா்களுடன் ராகுல் காந்தி வாக்குரிமைப் பேரணி: ஆக. 17-இல் தொடங்குகிறாா்

Published on

பிகாரில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மேற்கொள்கிறாா்.

நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், இதற்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான முறைகேடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை மேற்கொள்ள எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த நடைப்பயணமானது ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடையும். இந்த நடைப்பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து இண்டி கூட்டணிக் கட்சித் தலைவா்களை காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் சந்தித்துப் பேசினாா்.

அதன் பிறகு, கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆகஸ்ட் 17 முதல் ராகுல் காந்தி மற்றும் ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்கள் இணைந்து, பிகாா் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மேற்கொள்ள உள்ளனா். ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டம் இனி தெருக்களில் நடக்கும்’ என்றாா்.

தோ்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பாடுவதாக கூறி, காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 14-ஆம் தேதி ‘மக்களாட்சி காப்போம் தீப பேரணி’, ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை ‘வாக்குத் திருடா்களே, பதவியிலிருந்து விலகுகங்கள்’ என்ற முழக்கத்துடன் பேரணிகள் மற்றும் செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் ஆகியவை நடத்தப்பட உள்ளன.

X
Dinamani
www.dinamani.com