இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2025, 2:50 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பதிலடியாக அமெரிக்கா மீது சீனாவும் வரியை அறிவித்தது. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் சில அரிய கனிமங்களின் ஏற்றுமதியையும் குறைத்தது.

இதனையடுத்து, சீனா மீதான வரியை அமெரிக்கா குறைத்தது.

இதனிடையே, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிவிதிப்பதாகக் கூறி, இந்தியா மீதும் 50 சதவிகித வரியை டிரம்ப் அறிவித்தார். டிரம்ப்பின் இந்த வரிவிதிப்பு உலக பொருளாதார நாடுகளிடையே பெரும் பேசுபொருளாகியது.

இந்த நிலையில், சீனாவுடன் இந்தியா மீண்டும் வர்த்தகத்தில் ஈடுபடவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லிபுலேக் கணவாய் (உத்தரகண்ட்), ஷிப்கி லா கணவாய் (இமாசல்), நாது லா கணவாய் (சிக்கிம்) உள்ளிட்டவற்றின் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதன்மூலம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மற்றும் சீன படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக, இருநாட்டின் உறவில் விரிசல் உண்டானது.

இந்த நிலையில், டிரம்ப்பின் காரணமாக இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

summary

India-China in talks to resume border trade after 5-year gap as tensions ease

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.