
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேரிட்ட பயங்கரவ விபத்தில், 10 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அருகே இன்று காலை இந்த கோர விபத்து நேர்ந்தது.
பிகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, சாலையில் வந்து கொண்டிருந்த டிரக் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் பேருந்தில் இருந்த 10 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நளா ஃபெர்ரி என்ற இடத்தில், இன்று காலை 7 மணியளவில், சாலையோரம் டிரக் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகவும், அதைக் கவனிக்காமல் வேகமாக வந்த பயணிகள் பேருந்து டிரக் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.