நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, நாட்டு மக்களுக்கு தீபாவளிப் பரிசு காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசியதாவது:
”சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பியுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். விரைவில் இந்தியா சொந்தமாக விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை அமைக்கும். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.
நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான நேரம் வந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்தால் சிறு, குறு தொழில்கள் பயனடையும். சீர்திருத்தத்துக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.
ஏழை, விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான நிதி மேம்படுத்தப்படும். லட்சாதிபதி பெண்களின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து மூன்று கோடியாக உயரும். வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 3.5 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள். இளைஞர்களுக்காக ஒரு லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
விவசாயிகள், மீனவர்களின் நலனில் ஒருபோது சமரசம் செய்து கொள்ளப்படாது. மக்களுக்காக செயல்படுவதே அரசு, அதை நோக்கியே பயணிக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Prime Minister Narendra Modi said on Friday that a big gift awaits the countrymen for Diwali.
இதையும் படிக்க : அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு!

மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்!

தவறுதலாக நடந்துவிட்டது! மோடி விடியோ பிளாக் செய்யப்பட்டது குறித்து ஃபேஸ்புக் விளக்கம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



