லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதைப் பற்றி...

வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி. - (கோப்புப் படம்)

Published On :

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லைப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.

ஒவ்வொரு தினமும் மாலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடிகளை இறக்கும் நிகழ்வினை காணவும், வீரர்களின் சிறப்பான அணிவகுப்பைக் காணவும், இரு நாட்டு மக்களும் ஆர்வமுடன் கூடுவார்கள். 

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டது.

மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் இன்று அட்டாரி - வாகா எல்லையில் நாட்டின் சுதந்திர நாளையொட்டி, இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்து ஆரவாரம் செய்ததுடன், ராணுவத்தினரை உற்சாகப்படுத்தும் விதமாக “வந்தே மாதரம்..” என தேசபக்தி முழக்கங்களுடன் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி அடைந்தனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அங்கு குழுமியிருந்தவர்களை உற்சாகமடைய வைத்தனர்.

கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாட்டின் முப்படையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண அரசு உயர் அதிகாரிகளுடன், பொதுமக்களும் பெருமளவில் வருகை தந்தனர். இதனை கண்டுகளித்த பொது மக்கள் வீரர்களுக்கு கைதட்டி உற்சாகமூட்டினர்.

Summary

Beating Retreat ceremony underway at Attari-Wagah Border

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.