டிரம்ப் வரி விதிப்பை, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில், நடந்த மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு ஒரு உபாயமும் சொல்லியிருக்கிறார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இழுபறியில் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு 50 சதவீத விரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியாவுக்கு ஒரு யோசனை தர விரும்புகிறேன். அதாவது, பிரதமர் மோடி, டிரம்புக்கு, அமைதிக்கான நோபல் அமைதி பரிசு கொடுக்கலாம் என பரிந்துரை செய்தால் ஒருவேளை டிரம்ப் வரி விதிப்பு திரும்பப் பெறப்படலாம் என்று கிண்டலடித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான், அப்படிக் கூறிதான் டிரம்பை ஏமாற்றியிருக்கிறது. பாகிஸ்தான், வரும் 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு டிரம்ப் பெயரை பரிந்துரைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் பொருந்தும், வேறு எந்த ஒரு நாடும், டிரம்ப் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தால் போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப் விதித்த புதிய 10% வரி சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம்
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!

ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலரின் உடல்நிலை கவலைக்கிடம்!

காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பவா் மோடி! அமெரிக்க அதிபா் டிரம்ப் புகழாரம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

