ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

மத்தியப் பிரதேசத்தில் மினி பேருந்தும் லாரியும் மோதல்: குஜராத் இசைக் குழுவின் 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவின் 4 பேர் பலியாகினர்.

News image

கோப்புப்படம்.

Updated On :16 ஆகஸ்ட் 2025, 9:25 pm IST

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவின் 4 பேர் பலியாகினர்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை நடத்திவிட்டு குஜராத்திற்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர். ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை காலை 6 மணியளவில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தவறான பாதையில் திரும்பியதால் விபத்து நிகழ்ந்தது. இதில் இசைக்குழு உறுப்பினர்களான ஹார்திக் டேவ் (37), பாடகர் ராஜா தாக்கூர் (28), அங்கித் தாக்கூர் (17), ராஜேந்திர சோலங்கி (47) ஆகியோர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், 17 பேருடன் வந்த மினி பேருந்தின் ஓட்டுநர், வாரணாசியில் இருந்து இடைவிடாமல் பயணித்ததால், சோர்வு காரணமாக மயக்கமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது என போலீஸ் அதிகாரி கூறினார். நான்கு பேரின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த இருவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. "காயமடைந்த ஓட்டுநரின் உடல்நிலை சீராகி பேசத் தொடங்கிய பிறகு, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்" என்று போலீஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Summary

Four members of a Gujarat-based music band were killed and 11 other persons were injured on Saturday in a collision between a mini bus and a small truck in Shivpuri district of Madhya Pradesh, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.