கேதார்நாத் யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பக்தர் பலியானார்.
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் யாத்திரைப் பாதையான சோடி கதேரா அருகே நிலச்சரிவின் காரணமாக மலையிலிருந்து பாறை உருண்டு பக்தர் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் பரமேஷ்வர் பீம் ராவ் கவால் (38) பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
பலியானவரின் உடல், யாத்ரா மேலாண்மைப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினரால் மீட்கப்பட்டு கௌரிகுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பரமேஷ்வர் பீம் ராவ் மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
உத்தரகாசியில் கடந்த ஆக.5 ஆம் தேதி, மேகவெடிப்பினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் தாராலி பகுதியில் இருந்த ஏராளமான குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டு சேதமாகின.
நிலச்சரிவில் 4 போ் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 49 போ் மாயமாகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
A pilgrim from Maharashtra died on Saturday after being hit by the debris of a landslide on the trek route to Kedarnath.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரம் இடைத்தேர்தல்: 9 மணி நிலவரம்!

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

கேதார்நாத் கோயில் நடை திறப்பு எப்போது?

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசுப் பணி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


