ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பால் பெய்த கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், இது குறித்து ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் விவரங்களைக் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்பகுதிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்.
இது குறித்து இன்று காலை அவர் தெரிவித்திருப்பதாவது: "பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மீட்புப்பணிகள் உள்ளூர் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களும் அங்கு விரைந்துள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகக்கு மோடி அரசால் அனைத்து உதவியும் வழங்கப்படும். ஜம்மு - காஷ்மீரின் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Union Home Minister Amit Shah spoke with J&K LG and CM regarding the cloudburst in Kathua.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ரிஷப் ஷெட்டி!
மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷா

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

தமிழகத்தில் காங்கிரஸ் ஒற்றை இலக்க வெற்றியைத் தாண்டாது-அமித் ஷா
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

