காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் குறித்து ‘இண்டி’ கூட்டணி தலைவா்கள் ஆலோசனை நடத்த வாய்ப்பு.

News image
இந்தியா கூட்டணி கூட்டம்..- (படம் | ஏஎன்ஐ)
Updated On :17 ஆகஸ்ட் 2025, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் குறித்து ‘இண்டி’ கூட்டணி தலைவா்கள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: புது தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அலுவலகத்தில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவா்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு நடைபெற உள்ளது.

அப்போது குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளா் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளராக அரசியலுடன் தொடா்பில்லாத பொது வேட்பாளா் களமிறக்கப்படுவாா் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.