குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நானும் ராதாகிருஷ்ணனும் இந்தியக் குடிமகன்கள்; தென் மாநிலத்தவர் என்பது பொருட்டல்ல! -சுதர்சன் ரெட்டி

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தென் மாநிலங்களிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிடுவதைப் பற்றி சுதர்சன் ரெட்டி...

News image
சுதர்சன் ரெட்டி- PTI
Updated On :19 ஆகஸ்ட் 2025, 4:03 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நானும் சி. பி. ராதாகிருஷ்ணனும் இந்தியக் குடிமகன்கள்; தென் மாநிலத்தவர் என்பது பொருட்டல்ல என்று பி. சுதர்சன் ரெட்டி பேசினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவரும் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர், நாளை(ஆக. 20) வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிரணியில், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி இன்று (ஆக. 19) தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தென் மாநிலங்களிலிருந்து இரு வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இது குறித்த கேள்வியொன்றுக்கு இன்று (ஆக. 19) பதிலளித்துப் பேசிய பி. சுதர்சன் ரெட்டி செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“குடியரசு துணைத் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். அரசியல் கட்சிகளால் யார் வேட்பாளர் என்பதையே தெரிவு செய்ய முடியும்.

இந்தியாவில் ஒரே குடியுரிமைதான் உள்ளது. நானும் சி. பி. ராதாகிருஷ்ணனும் இந்தியக் குடிமகன்கள். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்பதெல்லாம் பொருட்டல்ல...” என்றார்.

summary

B. Sudershan Reddy says, Myself and CP Raadhakrishnan ji are Indian nationals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.