அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புணே, நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு 28,824 பேரை புதிதாக பணியில் சேர்த்துள்ளது.
இந்த நிறுவனம் சமீபத்தில் ஓப்பன்ஏஐ(OpenAI) உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் உயர்நிலை ஆலோசனை நடத்தியது.
இதன்பின்னரே இந்தியாவில் சுமார் 10%, சுமார் 3,000 ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துள்ளது.
மென்பொருள் மேம்பாடு, கிளவுட் சேவைகள், வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களை இந்த பணி நீக்கம் கடுமையாக பாதித்துள்ளது.
செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானால் ஐடி துறையில் பணி நீக்கங்கள் தொடர்ந்து வருகின்றன.
Summary
Oracle Layoff: Nearly 3,000 Jobs Cut in India, Bengaluru, Mumbai Worst Hit Amid AI-Driven Restructuring
இதையும் படிக்க | கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை சேப்பாக்கத்தில் பிக்பாஷ் லீக்கின் முதல் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
7,000mAh பேட்டரி திறன், குறைந்த விலை! மோட்டோ ஜி77 பவர் இந்தியாவில் அறிமுகமானது!

இந்தியாவில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கம்! ஏன்?







