பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22ல் கயாஜி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து பேரணியில் உரையாற்ற உள்ளதாக துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி புதன்கிழமை தெரிவித்தார்.
பிரதமரின் விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட சௌத்ரி சமீபத்தில் கயாஜிக்குச் சென்றிருந்தார்.
இதுதொடர்பாக துணை முதல்வரின் எக்ஸ் பதிவில்,
பிரதமர் மோடி மீண்டும் பிகாருக்கு வருகை தருகிறார். ஆகஸ்ட் 22ல் கயாஜிக்கு வரும் பிரதமர் கங்கை நதியின் மீது பிகாரின் முதல் ஆறு வழிப் பாலம் மற்றும் ரூ. 1,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் திறந்துவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.
நாட்டின் மிகவும் பிரபலமான தலைவரான பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்க நீங்கள் அனைவரும் கயாஜிக்கு வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்
முன்னதாக கடந்த ஏப்ரல் முதல் மோதிஹாரி, சிவான், மதுபானி, பாட்னா ஆகிய இடங்களுக்கு பிரதமர் சென்றிருந்தார். இந்த ஆண்டு இறுதியில் பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Ahead of the Bihar assembly elections, Prime Minister Narendra Modi will visit Gayaji district on August 22 to launch several projects and address a public rally, Deputy Chief Minister Samrat Choudhary said on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவைக்கு அதிக திட்டங்களைத் தந்தவா் மு.க.ஸ்டாலின்: வி.செந்தில்பாலாஜி பேச்சு

நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்யும் காங்கிரஸ்: பிரதமர் மோடி!

கோக்ரஜாருக்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பின்லாந்துடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்க ஒப்புதல்: பிரதமர் மோடி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


