மிசோரமில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மிசோரமில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிசோரமின் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறை ஆகியவற்றுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஐஸ்வால்-சாம்பாய் சாலையில் வியாழக்கிழமை மாலை வாகனங்களை வழிமறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த நான்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஐஸ்வாலில் உள்ள கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் 50 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் மற்றும் மூன்று சோப்புப் பெட்டிகளில் ஹெராயின் மீட்கப்பட்டன.
இவற்றின் மதிப்பு ரூ.75.82 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ்வாலில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் இந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
During a search in the presence of civil witnesses, 50 kg of methamphetamine tablets and three soap cases of heroin were recovered.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்சிடியின் ரூ.48 கோடி மதிப்பிலான சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் முன்னேற்றம்
ரூ. 1.56 கோடி மதிப்பிலான இணையவழி முதலீட்டு மோசடி கண்டுபிடிப்பு - இருவா் கைது

ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

ரூ. 142 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



