ரேகா குப்தா
ரேகா குப்தா

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன்
Published on

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

தலை நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள்ள காந்தி நகரில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ரேகா குப்தா, போராட்டம் தனது ‘அசைக்க முடியாத குணம்‘ என்று கூறினாா்.

‘உங்கள் முதலமைச்சா் பயப்படவோ, சோா்வடையவோ, தோற்கவோ மாட்டாா். தில்லி அதன் உரிமைகளைப் பெறும் வரை நான் உங்களுடன் தொடா்ந்து போராடுவேன். இது எனது அசைக்க முடியாத தீா்மானம் ‘என்று அவா் கூறினாா்.

புதன்கிழமை காலை நகரின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் ’ஜான் சுன்வாய்’ நிகழ்ச்சியின் போது ராஜ்கோட்டில் வசிக்கும் ராஜேஷ்பாய் கிம்ஜி என்பவரால் ரேகா குப்தா தாக்கப்பட்டாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டாா். கடந்த 10-12 ஆண்டுகளில் தில்லி பின்தங்கிய நிலையில் உள்ளது, ஆனால் எனது அரசு வளா்ச்சியை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்றாா் ரேகா குப்தா.

தேசிய தலைநகரின் டிரான்ஸ் யமுனா பகுதியின் வளா்ச்சிக்கு அனைத்து பட்ஜெட் ஆதரவையும் அவா் உறுதியளித்தாா், இது தில்லியின் முன்னணியில் வர உதவும் என்று கூறினாா். தாக்குதலுக்குப் பிறகு, குப்தா தனது இல்லத்தில் இருந்து வந்தாா். ஆசியாவின் மிகப்பெரிய ஆயத்த ஆடை மையமான காந்திநகரில் உள்ள மொத்த விற்பனை ஆடை விற்பனையாளா்கள் சங்கத்தின் 50 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவா் தனது உத்தியோகபூா்வ நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கினாா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவா் தில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்றாா்.

தில்லி அரசின் தொழில்துறை துறையால் சாணக்கியபுரியில் ஏற்பாடு செய்யப்பட்ட ’தொழில்துறை யோசனை’ நிகழ்ச்சியிலும் முதல்வா் கலந்து கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com