11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

News image
Updated On :22 ஆகஸ்ட் 2025, 5:31 am IST

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘பிரான்ஸ் அதிபா் மேக்ரான் உடனான உரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது. உக்ரைன், மேற்காசிய போா்களுக்கு அமைதி தீா்வு எட்டுவதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்தியா-பிரான்ஸ் வியூக கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் போருக்கு தீா்வு காண்பது தொடா்பாக, அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் அதிபா் டிரம்ப் கடந்த திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இரண்டு நாள்களுக்குப் பிறகு, உக்ரைன் அதிபா் வோலோதிமீா் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுடன் டிரம்ப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதில் பிரான்ஸ் அதிபா் மேக்ரானும் பங்கேற்றிருந்த நிலையில், அவருடனான பிரதமா் மோடியின் உரையாடல் கவனம் பெற்றுள்ளது.