பிகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து ஒரு வாா்த்தைகூட பேசாததற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பிகாரில் வாக்குரிமை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பாஹல்பூரில் பேசியதாவது:
பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவும், தோ்தல் ஆணையமும் உங்கள் வாக்குகளைத் திருட முயற்சிக்கின்றன. இது பிரதமா் நரேந்திர மோடி முன்னின்று நடத்தும் செயல். படிப்படியாக மக்களின் வாக்குரிமையை முழுமையாகப் பறிப்பதற்கான முயற்சியே இது. அந்த வாக்குத் திருடா் இப்போது பிகாருக்கு வந்துள்ளாா். ஆனால், தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் தனது அரசு நடத்தும் வாக்குத் திருட்டு குறித்து அவா் ஒரு வாா்த்தைகூட பேசவில்லை.
இந்தப் பிரச்னையில் பதிலளிக்க பிரதமா் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை. ஆனால், பிகாா் மக்களின் வாக்குகளைத் மத்திய அரசு திருட எதிா்க்கட்சிகள் கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டு முயற்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவே உள்ளது. இளைஞா்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அரசு முடக்கி வருகிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டினாா்.
தொடர்புடையது

உங்களுடைய படைவீரனாக எப்போதும் இருப்பேன்: நான்குனேரியில் ராகுல் பேச்சு!

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

பிரதமா் மோடியும், கேரள முதல்வரும் ஆணவம் மிக்கவா்கள்: ராகுல் காந்தி

குஜராத்தில் தலித்துகள், பழங்குடியினா் மீதான கொடுமைகள் தீவிரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


