வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தில்லியிலிருந்து புறப்பட்ட சிபிஐ அதிகாரிகள் குழு, மும்பையில் உள்ள அனில் அம்பானியின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். சிபிஐ அதிகாரிகள் வீட்டுக்கு வந்த போது, அனில் அம்பானி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ஸ்டேட் வங்கியில் அனில் அம்பானி செய்த முறைகேடுகளால் ரூ.2,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஸ்டேட் வங்கி புகார் அளித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மோசடியானது என கடந்த ஜூன் 13ஆம் தேதி அறிவித்திருந்தது.
அதாவது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை "மோசடி' என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநர் அனில் அம்பானி மீது ரிசர்வ் வங்கியில் எஸ்பிஐ புகாரளித்து, அதன்படி, சிபிஐ இதனை விசாரித்து வருகிறது.
வங்கிக் கடன் மோசடி தொடர்பான விசாரணைக்காக புது தில்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியிருந்தார் அனில் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிரான வழக்கு: அனில் அம்பானியின் ரூ 3,034 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பு: அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்கு

ரிலையன்ஸ் டெலிகாம் முன்னாள் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு! இத்தனை கோடிகள் மோசடியா?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


