சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையில் சைதன்ய பகேல்...


மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது: “மதுபான ஊழலில், சைதன்ய பகேலுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸாரால் கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.
அதனைத்தொடர்ந்து, இன்று(ஆக. 23) ராய்பூரிலுள்ள நீதிமன்றத்தில் முறையிடுகையில், அவரை 14 நாள் விசாரிக்க அமலாக்கத்துறையால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப். 6-ஆம் தேதி நடைபெறும். இதுவரை சைதன்ய பகேல் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைக்கவே இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...