கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையில் சைதன்ய பகேல்...

News image
சைதன்ய பகேல்- கோப்புப்படம்
Updated On :23 ஆகஸ்ட் 2025, 2:43 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது: “மதுபான ஊழலில், சைதன்ய பகேலுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸாரால் கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

அதனைத்தொடர்ந்து, இன்று(ஆக. 23) ராய்பூரிலுள்ள நீதிமன்றத்தில் முறையிடுகையில், அவரை 14 நாள் விசாரிக்க அமலாக்கத்துறையால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப். 6-ஆம் தேதி நடைபெறும். இதுவரை சைதன்ய பகேல் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைக்கவே இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

summary

Chaitanya Baghel sent to 14-day judicial custody

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.