நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு

Updated On :23 ஆகஸ்ட் 2025, 10:52 pm IST

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது.

இருநாடுகளிடையே கடந்த 2022, டிசம்பரில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிஇசிஏ) தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் ஆக.18 முதல் ஆக.23 வரை நடைபெற்றது.

பேச்சுவாா்த்தையின்போது சரக்கு மற்றும் சேவைகள், எண்ம வா்த்தகம், சட்ட விதிகள், சுற்றுச்சூழல், தொழிலாளா் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இருநாடுகளிடையே பொருளாதார ரீதியாக வலுவான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான இந்த ஒப்பந்தத்தை விரைவில் இறுதிசெய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளுடன் பேச்சுவாா்த்தை: அமெரிக்கா, சிலி, பெரு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (எஃப்டிஏ) இறுதிசெய்வது தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா். புது தில்லியில் நடைபெற்ற தொழில்முனைவோா் மற்றும் வா்த்தகா்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.