தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு

Updated On :23 ஆகஸ்ட் 2025, 5:22 pm

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது.

இருநாடுகளிடையே கடந்த 2022, டிசம்பரில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிஇசிஏ) தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் ஆக.18 முதல் ஆக.23 வரை நடைபெற்றது.

பேச்சுவாா்த்தையின்போது சரக்கு மற்றும் சேவைகள், எண்ம வா்த்தகம், சட்ட விதிகள், சுற்றுச்சூழல், தொழிலாளா் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இருநாடுகளிடையே பொருளாதார ரீதியாக வலுவான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான இந்த ஒப்பந்தத்தை விரைவில் இறுதிசெய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளுடன் பேச்சுவாா்த்தை: அமெரிக்கா, சிலி, பெரு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (எஃப்டிஏ) இறுதிசெய்வது தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா். புது தில்லியில் நடைபெற்ற தொழில்முனைவோா் மற்றும் வா்த்தகா்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற அவா் இவ்வாறு தெரிவித்தாா்.