சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.
சாய்ராங் பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையமானது, 48 சுரங்கங்கள் வழியாகவும் 53 பாலங்கள் வழியாகவும் செல்லும் வழித்தடங்களைக் கொண்டுள்ளது.
மிசோரம் மாநிலம் ஐஸ்வால் பகுதியில் நடைபெற்ற மாநில காவல் துறை சேவை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் லால்துஹோமா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்,
''பைராபி - சாய்ராங் பகுதிகளுக்கு இடையிலான அகல ரயில் பாதையானது, 51.38 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ரயில் நிலையம் சாய்ராங் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் அமையவுள்ளது. இதற்கான பணிகள் 2008 -2009 ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது முடியும் தருவாயில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை ஓட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பணிகள் சேவை தொடங்கும். செப்டம்பர் 12ஆம் தேதி மிசோரத்திற்கு வரும் பிரதமர் மோடி, செப். 13ஆம் தேதி ரயில் நிலையத்தை தொடக்கிவைக்கிறார்.
நாட்டின் வேறு எந்த ரயில் பாதையும் கொண்டிருக்காத வகையில் 48 சுரங்கள் வழியாகவும், 53 முக்கிய பாலங்கள் வழியாகவும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் உயர்ந்த ரயில் பாதையாகவும் 104 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொறியியல் வரலாற்றில் சவால் நிறைந்த பணியாகவும் மிசோரம் ரயில் பாதை மாறியுள்ளது.
மிசோரத்தில் அமையவுள்ள ரயில் நிலையத்தின் மூலம் போக்குவரத்துக்கான செலவு குறையும். பயணிகள் எண்ணிக்கையும், மிசோரத்தின் பொருளாதாரமும் உயரும். வேளாண்மை மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். ராஜ்தானி விரைவு ரயில் போன்ற தொலைதூர சேவைகளை உள்ளடக்கியதாக சாய்ராங் ரயில் நிலையம் இருக்கும்.
மேலும், சாய்ராங் ரயில் நிலையத்தை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்கு தேவையான நவீன வசதிகளையும் உள்கட்டமைப்புகளையும் உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது'' என முதல்வர் பேசினார்.
Summary
PM Narendra Modi to inaugurate Mizoram’s first railway station on Sept 13
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


