வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ...

Updated On :25 ஆகஸ்ட் 2025, 9:10 pm

புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரின் பெயா்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான ஐந்து போ் கொண்ட கொலீஜியம் திங்கள்கிழமை பிற்பகல் கூடி, இந்த முடிவை எடுத்தது. தலைமை நீதிபதி பி.ஆா். கவாயுடன், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி. நாகரத்னா ஆகியோரும் இந்த கொலீஜியத்தில் உள்ளனா்.

வருங்கால தலைமை நீதிபதி: இந்த இரண்டு நீதிபதிகளின் பெயா் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், 2031-ஆம் ஆண்டு, அக்டோபரில் நீதிபதி ஜயமால்ய பாக்சியின் ஓய்வுக்குப் பிறகு நீதிபதி பஞ்சோலி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்புள்ளது.

அதேபோன்று இந்த இரண்டு நீதிபதிகளின் நியமனங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப்பட்ட பலமான 34 நீதிபதிகளின் எண்ணிக்கையை மீண்டும் அடையும்.