அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்குதல் வழக்கு: இரண்டாவது நபர் கைது

முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் தொடர்பாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மற்றொரு நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா. - Photo ANI

Updated On :25 ஆகஸ்ட் 2025, 3:28 am

முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் தொடர்பாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மற்றொரு நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர் தஹ்சீன் சையத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு விசாரணைக்காக தலைநகருக்கு அழைத்து வரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் முக்கிய குற்றவாளியான சாக்ரியா ராஜேஷ்பாய் கிம்ஜிபாயின் நண்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை காலை நகரின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் ’ஜான் சுன்வாய்’ நிகழ்ச்சியின் போது ராஜ்கோட்டில் வசிக்கும் ராஜேஷ்பாய் கிம்ஜி என்பவரால் தில்லி முதுல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டாா்.

இந்த தாக்குதலை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கண்டித்தன.

அதே நேரத்தில் தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை குறித்து காவல்துறையினரிடம் அவா்கள் கேள்வி எழுப்பினா். ஏற்கெனவே தில்லி முதல்வர் மீதான தாக்குதல் தொடர்பாக ஆட்டோரிக்ஷா ஓட்டுநரான கிம்ஜி (41) கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Summary

The Delhi Police on Sunday arrested another person in connection with the assault on Chief Minister Rekha Gupta, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.