மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
மழை (கோப்புப்படம்)
Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தானில் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர் உள்ட பிற மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையத்தின்படி, ராஜ்சமந்த், சிரோஹி, உதய்பூர் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், நாகூர், சுரு, ஜலூர், உதய்பூர் மற்றும் சிரோஹி ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்தது, அதே நேரத்தில் சிகார், ஹனுமன்கர், பிகானர், ஜோத்பூர், தோல்பூர் மற்றும் அஜ்மீர் ஆகிய இடங்களில் கனமழை பதிவானது. நாகூரில் மட்டும் அதிகபட்சமாக 173 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டா, பூண்டி மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்களின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நகரங்களின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் குடியிருப்பாளர்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மூன்று மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் சிவில் அதிகாரிகளுக்கு உதவ ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரப்பூர் அறிக்கையின்படி, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 7 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் 57 குழுக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெய்ப்பூர் உள்பட பல மாவட்டங்களில் உள்ள உள்ளூர் நிர்வாகங்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை முதல் மிக கனமழை வரை தொடரக்கூடும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது, மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தண்ணீர் தேங்கும் பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

summary

With heavy to very heavy rain likely to continue on Monday and Tuesday in several parts of Rajasthan, the state government announced that schools across Jaipur and other districts will be closed as a precautionary measure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.