
உத்தரகண்ட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யமுனோத்ரி, கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.
நலூனா பகுதியருகே ஏற்பட்ட நிலச்சரிவால் உத்தர்காசி கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. நிலசரிவுகள் ஆங்காங்கே தொடர்ந்து ஏற்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, யமுனோத்ரி நெடுஞ்சாலையில் பனாஸ் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் வாகனப் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.
தலைநகர் டேராடூன் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.