தலைநகர் தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பள்ளிப் பேருந்துகளும் மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
சர்தார் படேல் வித்யாலயாவில் மாணவர்களுக்கான மின்சாரப் பேருந்துகளை முதல்வர் ரேகா குப்தா, துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுடன் இணைந்து கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தலைநகரில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கியமாக பள்ளிப் பேருந்துகள் ஒரு பெரிய பிரிவை உருவாக்குகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் தில்லி சாலையில் செல்கின்றன.
தில்லி போக்குவரத்துக் கழகத்துடன் சர்தார் படேல் வித்யாலயாவுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். மேலும் மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் குளிரூட்டப்பட்டவை மற்றும் வசதியானவை என்று அவர் கூறினார்.
Summary
Delhi Chief Minister Rekha Gupta on Tuesday said school buses going electric would help curb pollution in the national capital.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் பெண் முதல்வருக்கு எதிராக பாஜக பெண் முதல்வர் பிரசாரம்!

‘தில்லி 2.0’ உருவாக்கத்தில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

தக்கலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயங்க தொடங்கின
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


