ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கெனவே வழக்கு!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பமாக நிக்கியின் கணவர் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது பற்றி..

News image

நொய்டா வரதட்சிணை வழக்கு

Photo | PTI

Updated On :26 ஆகஸ்ட் 2025, 7:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில, 26 வயதே ஆன நிக்கி பாட்டி, வரதட்சிணைக்காக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தல் திடீர் திருப்பமாக கணவர் விபின் பாட்டி மீது ஏற்கெனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

நிக்கி, தன்னை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாகவும், அடித்துத் துன்புறுத்துவதாகவும் காவல்நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்ததன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரேட்டர் நொய்டா காவல்நிலையத்தில், ஒரு பெண் விபின் மீது புகார் அளித்திருக்கிறார். அதில், தன்னை விபின் காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிக்கியை திருமணம் செய்து கொண்ட பிறகும், தன்னுடன் பழகி வந்த நிலையில், ஒருநாள் நிக்கி தனது சகோதரியுடன் வந்து, தன்னையும் விபினையும் பிடித்து சண்டையிட்டபோது, நிக்கியிடமிருந்து தப்பிக்க தன்னை அடித்துத் துன்புறுத்தியதகாவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

வரதட்சிணைப் புகாரில், மனைவி நிக்கியை எரித்துக் கொலை செய்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர், விபின் மீது வேறு வழக்குகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது, ஏற்கனவே ஒரு பெண்ணுடன் பழகி வந்து வழக்குப் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிக்கியின் தந்தையிடமிருந்து ரூ.36 லட்சம் வரதட்சிணை வாங்கி வருமாறு விபின் வலியுறுத்தி வந்திருக்கிறார். நிக்கி அதற்கு மறுத்ததால், எரியும் திரவத்தை அவர் மீது ஊற்றி தீவைத்துக் கொளுத்தியிருக்கிறார். இதனை அதே வீட்டில் வாழ்ந்து வரும் நிக்கியின் சகோதரி காஞ்சன் தன்னுடைய செல்ஃபோனில் எடுத்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வழக்கில், விபின், அவரது தாய் தயா, தந்தை சத்வீர், சகோதரர் ரோஹித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.