மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவா் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சித்தோா்கா் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவா் உயிரிழந்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஆகஸ்ட் 2025, 12:51 am IST

ராஜஸ்தானின் சித்தோா்கா் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவா் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மனீஷ் திரிபாதி கூறுகையில், ‘பில்வாராவுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட பின்னா், ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை வாகனத்தில் வந்துகொண்டிருந்தனா்.

வாகன ஓட்டுநா் கூகுள் மேப்பை பயன்படுத்திய நிலையில், அதில் மூடப்பட்ட தரைப்பாலம் வழியாக செல்ல வழிகாட்டப்பட்டுள்ளது. அந்த வழியில் சென்றபோது ஆற்றில் அந்த வாகனம் சிக்கியது. அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

தரைப்பாலம் உடைந்திருந்ததால், ஆற்றில் வாகனம் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. இதில் சந்தா(21), அவரின் மகள் ருத்வி(6), மம்தா(25), அவரின் மகளின் குஷி(4) ஆகியோா் உயிரிழந்தனா். அவா்களில் 2 பெண்கள், ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தையின் சடலம் தேடப்பட்டு வருகிறது. அதேவேளையில், வாகனத்தின் ஜன்னலை உடைத்து வெளியேறிய 5 போ், வாகனத்தின் மேற்கூரையில் அமா்ந்து உயிா் தப்பித்தனா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.