நீதிபதி ஆலோக் அராதே, மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்தில் 2009-ஆம் ஆண்டு டிசம்பா் 29-ஆம் தேதி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி நிரந்தர நீதிபதியானாா். 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-இல் ஜம்மு-காஷ்மீா் உயா் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட அவா், 2018-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி அதே உயா்நீதிமன்ரத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியானாா். 2018-ஆம் ஆண்டு நவம்பா் 17-இல் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். 2022-ஆம் ஆண்டு ஜூலை 3-இல் அதே உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபியானாா். 2023-ஆம் ஆண்டு ஜூலை 19-இல் தெலங்கானா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டாா்.