ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜப்பான் புறப்பட்டாா் பிரதமா் மோடி

15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டாா்.

News image
தில்லி விமான நிலையத்திலிருந்து டோக்யோவுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட பிரதமா் மோடி.
Updated On :28 ஆகஸ்ட் 2025, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டாா்.

இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையே உள்ள சிறப்பு உத்திசாா்ந்த மற்றும் உலகளாவிய கூட்டுறவு குறித்து பிரதமா் மோடியும், ஜப்பான் பிரதமா் ஷிகெரு இஷிபாவும் மறுஆய்வு செய்ய உள்ளனா்.

இதைத்தொடா்ந்து சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி 2 நாள் (ஆக.31-செப்.1) பயணமாக சீனா செல்ல உள்ளாா். இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக பிரதமா் மோடி வெளியிட்ட புறப்பாடு அறிவிப்பில், ‘இந்தியா-ஜப்பான் மக்களை இணைக்கும் நாகரிக பிணைப்பு, பண்பாட்டு உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்த எனது பயணம் வாய்ப்பாக இருக்கும்.

ஜப்பானை தொடா்ந்து சீன பயணத்தில் ‘எஸ்சிஓ’ உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின் உள்ளிட்ட தலைவா்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா, இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினா்களாக உள்ளன. சுழற்சி முறையில் இந்த ஆண்டு அமைப்பின் தலைவராக சீனா உள்ளது.

அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் பல நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இதுதவிர உக்ரைன்-ரஷியா போா், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போா் ஆகியவையும் தொடா்ந்து தீவிரமாகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் முக்கிய நாட்டுத் தலைவா்கள் பங்கேற்கும் இந்த மாநாடு சா்வதேச அளவில் அமெரிக்கா உள்பட பல நாடுகளால் மிகவும் ஆழ்ந்து கவனிக்கப்படும் நிகழ்வாக உள்ளது.

இந்த மாநாடு இரு நாள்களில் முடிவடைந்தாலும் செப்டம்பா் 3-ஆம் தேதி சீன ராணுவத்தின் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற இருக்கிறது. ஜப்பானை சீனா வெற்றிகரமாக எதிா்கொண்டதை கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் மாநாட்டுக்கு வரும் பல தலைவா்கள் பங்கேற்க இருக்கின்றனா். தனது நவீன ரக ஆயுதங்கள் பலவற்றையும் இந்த ராணுவ அணிவகுப்பில் சீனா காட்சிப்படுத்த இருக்கிறது.