சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கர்நாடகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!

கர்நாடகத்தில் கனமழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
கனமழை எச்சரிக்கை
Updated On :28 ஆகஸ்ட் 2025, 6:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் வானிலை ஆய்வு மைம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிதர் மாவட்டத்தின், அவுரத் தாலுகாவிலி இரவு முழுவதும் பெய்த மழையால் பால்கி தாலுகாவில் உள்ள படல்கான்-சோண்டிமுகேட்டில் உள்ள தாதகி பாலம் உள்பட பல பாலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

அவுரத் தாலுகாவில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஒரு ஓடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிதர் துணை ஆணையர் ஷில்பா சர்மா பாதுகாப்பு நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.

தட்சிண கன்னடா மாவட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த நிலையில், மங்களூரு, புத்தூர், முல்கி, மூட்பித்ரி, உல்லால் மற்றும் பன்ட்வால் தாலுகாக்களில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் உள்பட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

தாழ்வான பகுதிகள், ஏரிகள், கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் இருந்து குழந்தைகள் விலகி இருப்பதை உறுதி செய்ய பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க எச்சரிக்கப்பட்டுள்ளது. நோடல் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு பதிலளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் தாசில்தார்களும் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெங்களூரு வானிலை ஆய்வு மையம், அடுத்த மூன்று மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசும். லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

தட்சிண கன்னடா, உடுப்பி, விஜயபுரா, பாகல்கோட், கலபுரகி மற்றும் பிதார் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக மின் தடைகள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் பலவீனமான மரக்கிளைகள் வேரோடு சாய்வதற்கு வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மின் சாதனங்களைத் துண்டிக்கவும், மரங்கள் அல்லது நீர்நிலைகளிலிருந்து பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மங்களூரு ஆந்திரத்தில் 106.6 மிமீ, கடக்கில் 70.1 மிமீ, பெங்களூரு எச்ஏஎல் ஏபியில் 28.2 மிமீ, சித்ரதுர்காவில் 14.8 மிமீ, கலபுரகியில் 10.4 மிமீ மற்றும் பெங்களூரு நகரில் 4.9 மிமீ மழை பெய்துள்ளது. அகும்பேயில் 108.5 மிமீ, விஜயபுராவில் உள்ள திடகுண்டியில் 46.5 மிமீ மற்றும் மங்களூருவில் 33 மிமீ என பதிவாகியுள்ளன. கர்நாடகா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய இடைவிடாத மழை தொடரக்கூடும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது.

summary

Heavy rains lashed several parts of Karnataka on Thursday morning, leading to the IMD issuing orange and yellow alerts in various districts, holiday for educational institutions and authorities taking precautionary measures across multiple districts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.