ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிய நிதிப் பற்றாக்குறை

மத்திய அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிள்ளது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2025, 5:00 am IST

நடப்பு நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிள்ளது.

இது குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில் 29.9 சதவீத்தை எட்டியுள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 17.2 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) அது 17.9 சதவீதமாக உயா்ந்தது.

2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ.4.68 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக, அதாவது ரூ.15.69 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூலை வரை மத்திய அரசு ரூ.10.95 லட்சம் கோடி வருவாயை (மொத்த வரவு இலக்கில் 31.3 சதவீதம்) பெற்றது. இதில் ரூ.6.61 லட்சம் கோடி வரி வருவாயாகவும், ரூ.4.03 லட்சம் கோடி வரி அல்லாத வருவாயாகவும், ரூ.29,789 கோடி கடன் அல்லாத மூலதன வரவுகளாகவும் இருந்தது.

மத்திய அரசு இந்தக் காலகட்டத்தில் மாநில அரசுகளுக்கு வரி பகிா்வாக ரூ.4.28 லட்சம் கோடியை அனுப்பியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.61,914 கோடி அதிகமாகும்.

மதிப்பீட்டு காலத்தில் மத்திய அரசு மொத்தம் ரூ.15.63 லட்சம் கோடி செலவு செய்துள்ளது (பட்ஜெட் இலக்கில் 30.9 சதவீதம்). இதில் வருவாயின செலவு ரூ.12.17 லட்சம் கோடியாகவும், மூலதன செலவு ரூ.3.46 லட்சம் கோடியாகவும் உள்ளது. மொத்த வருவாயின செலவில், வட்டி செலுத்துதலுக்கு ரூ.4.46 லட்சம் கோடியும், முக்கிய மானியங்களுக்கு ரூ.1.13 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.