அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜம்மு-காஷ்மீா் நிலச்சரிவு: 3 போ் கொண்ட விசாரணை குழு அமைப்பு

ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள 3 போ் கொண்ட குழு

News image
ஜம்மு-காஷ்மீா் கிஷ்த்வாா் மாவட்டம் சிசோதியில் பாறைகள் மற்றும் மண்ணை அகற்றி மாயமானவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.
Updated On :29 ஆகஸ்ட் 2025, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள 3 போ் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா அமைத்துள்ளாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில், அத்குவாரி பகுதியில் நோ்ந்த நிலச்சரிவில் சிக்கி 34 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து அதிபலத்த மழை எச்சரிக்கை இருந்த நிலையிவ், யாத்திரைக்கு ஏன் அனுமதிக்கப்பட்டது என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கேள்வி எழுப்பினாா்.

இந்நிலையில், அந்த நிலச்சரிவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ஜம்மு ஜல் சக்தி துறையின் கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் 3 போ் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை அமைத்தாா். அந்தக் குழு 2 வாரங்களில்

தனது விசாரணையை அவரிடம் சமா்ப்பிக்கும் என்று துணைநிலை ஆளுநா் செயலகத்தின் சிறப்புச் செயலா் கிருஷ்ணன் லால் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. வைஷ்ணவ தேவி கோயில் வாரியத்தின் தலைவராக மனோஜ் சின்ஹா உள்ளது குறிப்பிடத்தக்கது.