மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பானிபூரி விற்ற முன்னாள் ஐடி ஊழியர்.. கர்ப்பிணி மனைவி தற்கொலையில் மர்மம்!

பெங்களூரில் 27 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
இளம்பெண் தற்கொலை
Updated On :29 ஆகஸ்ட் 2025, 8:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடகத்தில் பானிபூரி விற்பனையாளரின் வரதட்சணை கொடுமையால் 27 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சுத்தகுண்டேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா(27). இருவரும் ஐடி துறையில் பணியாற்றி வந்தனர். திருமணமான ஓராண்டில் பிரவீன் தனது ஐடி பணியை விட்டுவிட்டு பானிபூரி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பு ஷில்பாவும் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், ஷில்பா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்தின்போது ஷில்பா குடும்பத்தினர் வரதட்சணையாக ரூ.50 லட்சம், 150 கிராமம் தங்கநகை வரதட்சணை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் பானிபூரி கடையை நடத்திவந்த பிரவீன் புதிதாகத் தொழில் தொடங்க பணம் தேவைப்படுவதாகக் கூறி ஷில்பாவை தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்துள்ளார்.

ஷில்பாவின் குடும்பத்தினர் தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் பிரவீனின் பணத்தேவையால் ஷில்பா நாளுக்குநாள் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் வெறுப்படைந்த ஷில்பா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்திய பிரவீன் குடும்பத்தினர் மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் தம்பதியரிடையே பிரச்னை தொடர்ந்து வந்தது.

விரக்தியின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற ஷில்பா மனம் உடைந்து, தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து பிரவீனின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் ஷில்பாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவர் பிரவீன், அவரது தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

summary

A 27-year-old  woman was found dead in south Bengaluru earlier this week, prompting a police investigation into allegations of dowry harassment and domestic abuse.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.