சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஜம்மு, பஞ்சாபில் கடும் வெள்ளம்! தீவிர மீட்புப் பணிகளில் விமானப் படை!

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் விமானப் படை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறித்து...

News image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் விமானப் படை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது...

Updated On :29 ஆகஸ்ட் 2025, 9:12 pm IST

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை, இந்திய விமானப் படையினர் மேற்கொண்டு வருவதாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கனமழை பெய்து முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மீட்புப் பணிகளில்...

மீட்புப் பணிகளில்...

இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ராணுவம், விமானப் படை உள்ளிட்ட படைகள் செய்து வருகின்றன.

இதில், விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ.-17 மற்றும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட டேரா பாபா நானக், பதான்கோட் மற்றும் அக்னூர் ஆகிய பகுதிகளில் சிக்கியிருந்த ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், விமானப் படையின் பிரத்யேக விமானங்கள் மூலம், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தரையிறக்கப்பட்டதுடன், கடந்த 3 நாள்களில் மட்டும் 7,300 கிலோ அளவிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் கனமழையானது தொடர்ந்து நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வெள்ளம் அதிகரிக்கும் அபாயமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Summary

The Indian Air Force is carrying out relief operations for people affected by floods in Jammu and Kashmir and Punjab, the Ministry of Defense has said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.