எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஜம்மு, பஞ்சாபில் கடும் வெள்ளம்! தீவிர மீட்புப் பணிகளில் விமானப் படை!

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் விமானப் படை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறித்து...

News image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் விமானப் படை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது...

Updated On :29 ஆகஸ்ட் 2025, 9:12 pm IST

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை, இந்திய விமானப் படையினர் மேற்கொண்டு வருவதாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கனமழை பெய்து முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மீட்புப் பணிகளில்...

மீட்புப் பணிகளில்...

இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ராணுவம், விமானப் படை உள்ளிட்ட படைகள் செய்து வருகின்றன.

இதில், விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ.-17 மற்றும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட டேரா பாபா நானக், பதான்கோட் மற்றும் அக்னூர் ஆகிய பகுதிகளில் சிக்கியிருந்த ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், விமானப் படையின் பிரத்யேக விமானங்கள் மூலம், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தரையிறக்கப்பட்டதுடன், கடந்த 3 நாள்களில் மட்டும் 7,300 கிலோ அளவிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் கனமழையானது தொடர்ந்து நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வெள்ளம் அதிகரிக்கும் அபாயமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Summary

The Indian Air Force is carrying out relief operations for people affected by floods in Jammu and Kashmir and Punjab, the Ministry of Defense has said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.