ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று 10 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீர், ரீஸி மாவட்டம் மஹோர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து ஏழு பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மஹோர் பகுதியில் பட்டார் கிராமத்தில் கனமழை பெய்ததால் கடும் நிலச்சரிவு ஏறப்ட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வீட்டில், நசிர் அகமது, அவரது மனைவி மற்றும் ஐந்து மகன்களுடன் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ராம்பன் மாவட்டத்தில் ராஜ்கட் பகுதியில், சனிக்கிழமை அதிகாலையில் மேக வெடிப்பு காரணமாக பயங்கர மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதாகவும், இதில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடங்களில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி

முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர்!

மழை குறுக்கீடு: ஜம்மு காஷ்மீர் 527 ரன்கள் குவிப்பு!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


