ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று 10 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீர், ரீஸி மாவட்டம் மஹோர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து ஏழு பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மஹோர் பகுதியில் பட்டார் கிராமத்தில் கனமழை பெய்ததால் கடும் நிலச்சரிவு ஏறப்ட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வீட்டில், நசிர் அகமது, அவரது மனைவி மற்றும் ஐந்து மகன்களுடன் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ராம்பன் மாவட்டத்தில் ராஜ்கட் பகுதியில், சனிக்கிழமை அதிகாலையில் மேக வெடிப்பு காரணமாக பயங்கர மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதாகவும், இதில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடங்களில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி!

தென் கொரியா ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 5 போ் பலி

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



