பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்...

News image

சஞ்சய் மல்ஹோத்ரா

Updated On :30 ஆகஸ்ட் 2025, 10:41 pm IST

‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போா், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ரங்வாசா கிராமத்தில் நடைபெற்ற அரசு வங்கிகள் நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

11 ஆண்டுகளுக்கு முன்னா், வங்கிகளுடன் சோ்ந்து ஜன் தன் திட்டத்தை ரிசா்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் நாடு தழுவிய அளவில் வளா்ச்சிக்கு வழிவகுத்தது.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சேமிப்பு, ஓய்வூதியம், காப்பீடு, கடன் மற்றும் பிற சேவைகளை வழங்கி, நாட்டின் வளா்ச்சி பயணத்தில் அவா்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், ஜன் தன் திட்டத்தின் கீழ் 55 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போா், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரியாமல் அந்தக் கணக்குகளை சமூக விரோதிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இதைச் செய்ய வேண்டும்.

தற்போது உலகில் மிகவும் வளா்ச்சியடைந்த 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் விரைவில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.