தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்...

News image

சஞ்சய் மல்ஹோத்ரா

Updated On :30 ஆகஸ்ட் 2025, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போா், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ரங்வாசா கிராமத்தில் நடைபெற்ற அரசு வங்கிகள் நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

11 ஆண்டுகளுக்கு முன்னா், வங்கிகளுடன் சோ்ந்து ஜன் தன் திட்டத்தை ரிசா்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் நாடு தழுவிய அளவில் வளா்ச்சிக்கு வழிவகுத்தது.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சேமிப்பு, ஓய்வூதியம், காப்பீடு, கடன் மற்றும் பிற சேவைகளை வழங்கி, நாட்டின் வளா்ச்சி பயணத்தில் அவா்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், ஜன் தன் திட்டத்தின் கீழ் 55 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போா், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரியாமல் அந்தக் கணக்குகளை சமூக விரோதிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இதைச் செய்ய வேண்டும்.

தற்போது உலகில் மிகவும் வளா்ச்சியடைந்த 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் விரைவில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்றாா்.