‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போா், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டாா்.
இதுதொடா்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ரங்வாசா கிராமத்தில் நடைபெற்ற அரசு வங்கிகள் நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
11 ஆண்டுகளுக்கு முன்னா், வங்கிகளுடன் சோ்ந்து ஜன் தன் திட்டத்தை ரிசா்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் நாடு தழுவிய அளவில் வளா்ச்சிக்கு வழிவகுத்தது.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சேமிப்பு, ஓய்வூதியம், காப்பீடு, கடன் மற்றும் பிற சேவைகளை வழங்கி, நாட்டின் வளா்ச்சி பயணத்தில் அவா்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், ஜன் தன் திட்டத்தின் கீழ் 55 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போா், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரியாமல் அந்தக் கணக்குகளை சமூக விரோதிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இதைச் செய்ய வேண்டும்.
தற்போது உலகில் மிகவும் வளா்ச்சியடைந்த 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் விரைவில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமீபத்திய முன்னெடுப்பால் 3,200 கோடி டாலா் அந்நிய டெபாசிட் ஈா்ப்பு

மேற்காசிய பிரச்னையும், பருவமழை குறைவும் வளா்ச்சிக்கு பெரும் அபாயங்கள்: ஆா்பிஐ ஆளுநா்

காதலைவிட, அட்வெஞ்சரில்தான் ஆர்வம்: இயக்குநர் ஜேசன் சஞ்சய்

ஜன் கல்யாண் சபா கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



