மிசோரமில் ரூ. 8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
மிசோரம் மாநிலம், பைரபியிலிருந்து சாய்ரங் வரை 52 கி.மீ. தொலைவுக்கு ரூ. 8,071 கோடியிலான புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மிசோரம் தலைநகரான ஐஸ்வால் பகுதியை இணைக்கும் வகையில் சுமாா் 52 கி.மீ. தூரத்துக்கு ரூ.5, 000 கோடியில் ரயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது. திட்டத்தின்படி 2014- ஆம் ஆண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்த ரயில் பாதையில் 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் மற்றும் 48 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரயில் பாதை அமைக்க மொத்தம் ரூ. 8,071 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ரயில் பாதையில் அமைந்துள்ள பாலங்களில் 114 மீட்டா் உயரமுள்ள சாய்ரங் பாலம் நாட்டில் இரண்டாவது உயரமான பாலமாக கூறப்படுகிறது.

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை.
இதுகுறித்து வடக்கிழக்கு எல்லை ரயில்வே மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி நிலஞ்சன் தேவ் கூறியதாவது:
இந்த ரயில் பாதைத் திட்டங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டன. சவாலான இப்பணியின்போது ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றன. பணிகளுக்கான கட்டுமான பொருள்களை அஸ்ஸாம், ஒடிஸா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரவேண்டியிருந்தது.
ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற பணியின்போது சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பணியில் ஈடுபட மிசோரம் மக்கள் ஆர்வம் காட்டாததால், பிகாா், ஒடிஸா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவா்களால்தான் பணிகள் நடைபெற்று முடிந்தன.
மலைகளுக்கிடையே ரயில் பாதை அமைக்கப்படுவதால், அதற்கான ஆயத்த பணிகளுக்கு சுமாா் 200 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டன. திட்டத்தில் பைரபியிலிருந்து 4 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்குள்ள கிராமங்களுடன் இணைக்க சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பாதை திட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். அதனால் சமூக, பொருளாதார வசதிகள் ஏற்படும் என்றாா்.
விலை குறையும்: இந்த ரயில் பாதைத் திட்டம் குறித்து தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி செந்தமிழ்ச்செல்வன் கூறுகையில், இதுவரை சாலை வழி பயணச் செலவு அதிகம் இருக்கும் நிலையில், தற்போது ரயில் வசதியால் செலவு குறையும் என்றாா்.
மேலும், புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வரும் செப். 13-ஆம் தேதியில் பிரதமா் நரேந்திர மோடி, திறந்துவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சௌமியா அன்புமணி எம்எல்ஏ

நாமக்கல் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலப் பணிகள் மும்முரம்

அரக்கோணம் ரயில் நிலையப் பகுதியில் ரூ.97.73 கோடியில் மேம்பாட்டுப் பணி: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



