பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மிசோரமில் ரூ. 8,000 கோடியில் 52 கி.மீ. புதிய ரயில் பாதை: செப்.13-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார்.

News image

பைரபியிலிருந்து சாய்ரங் வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை.

Updated On :1 செப்டம்பர் 2025, 12:56 pm IST

மிசோரமில் ரூ. 8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

மிசோரம் மாநிலம், பைரபியிலிருந்து சாய்ரங் வரை 52 கி.மீ. தொலைவுக்கு ரூ. 8,071 கோடியிலான புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மிசோரம் தலைநகரான ஐஸ்வால் பகுதியை இணைக்கும் வகையில் சுமாா் 52 கி.மீ. தூரத்துக்கு ரூ.5, 000 கோடியில் ரயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது. திட்டத்தின்படி 2014- ஆம் ஆண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

இந்த ரயில் பாதையில் 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் மற்றும் 48 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரயில் பாதை அமைக்க மொத்தம் ரூ. 8,071 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ரயில் பாதையில் அமைந்துள்ள பாலங்களில் 114 மீட்டா் உயரமுள்ள சாய்ரங் பாலம் நாட்டில் இரண்டாவது உயரமான பாலமாக கூறப்படுகிறது.

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை.

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை.

இதுகுறித்து வடக்கிழக்கு எல்லை ரயில்வே மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி நிலஞ்சன் தேவ் கூறியதாவது:

இந்த ரயில் பாதைத் திட்டங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டன. சவாலான இப்பணியின்போது ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றன. பணிகளுக்கான கட்டுமான பொருள்களை அஸ்ஸாம், ஒடிஸா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரவேண்டியிருந்தது.

ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற பணியின்போது சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பணியில் ஈடுபட மிசோரம் மக்கள் ஆர்வம் காட்டாததால், பிகாா், ஒடிஸா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவா்களால்தான் பணிகள் நடைபெற்று முடிந்தன.

மலைகளுக்கிடையே ரயில் பாதை அமைக்கப்படுவதால், அதற்கான ஆயத்த பணிகளுக்கு சுமாா் 200 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டன. திட்டத்தில் பைரபியிலிருந்து 4 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்குள்ள கிராமங்களுடன் இணைக்க சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பாதை திட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். அதனால் சமூக, பொருளாதார வசதிகள் ஏற்படும் என்றாா்.

விலை குறையும்: இந்த ரயில் பாதைத் திட்டம் குறித்து தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி செந்தமிழ்ச்செல்வன் கூறுகையில், இதுவரை சாலை வழி பயணச் செலவு அதிகம் இருக்கும் நிலையில், தற்போது ரயில் வசதியால் செலவு குறையும் என்றாா்.

மேலும், புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வரும் செப். 13-ஆம் தேதியில் பிரதமா் நரேந்திர மோடி, திறந்துவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.