எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் நேர்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு.

News image

ராம்பன் பகுதியில் நடைபெற்றுவரும் மீட்புப் பணிகள் - பிடிஐ

Updated On :31 ஆகஸ்ட் 2025, 11:00 am IST

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் நேர்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக ராம்பன் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கால் ராம்பன் - தோடா மாவட்டங்களுக்கு இடையேயான முக்கிய சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள், சொத்துகள் சேதமடைந்துள்ளன.

பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட குல்மார்க் பகுதியிலுள்ள நல்லா நதியில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், நதியின் இரு கரைகளில் உள்ள மக்களும் போக்குவரத்து இன்று தனித்துவிடப்பட்டுள்ளனர்.

கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலை - தோடா இடையேயான இணைப்புச் சாலைகளுக்கு மாற்றுப்பாதையாக இந்த பாலம் இருந்துவந்த நிலையில், தற்போது அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலுள்ள வாரன் பள்ளத்தாக்கில் கடந்த 27ஆம் தேதி மேக வெடிப்பு நேர்ந்தது. இதில், 50க்கும் அதிகமான வீடுகள் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டன. விவசாய நிலங்கள் சரிந்து பயிர்கள் சீர்குலைந்தன. எனினும் இதில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

இதனைத் தொடர்ந்து 27ஆம் தேதி நேர்ந்த மேக வெடிப்பில் ராம்பன் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராம்பன் - தோடா இடையேனான முக்கிய சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

Summary

A cloudburst on 29th August night claimed four lives and wreaked havoc in parts of Ramban-Doda district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.