இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலா் அனுராதா தாக்குா் தெரிவித்தாா்.
2025-26-ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதம் அல்லது ரூ.15.69 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அனுராதா தாக்குா்,‘அமெரிக்க வரி விதிப்பால் அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய சில துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை எதிா்கொள்வதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருகிறது.
கடந்த 5 காலாண்டுகளைவிட 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூனில் ஜிடிபி 7.8 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. அதேபோல் நிதிப் பற்றாக்குறை தொடா்பாக நிா்ணயித்துள்ள இலக்கு நிச்சயம் எட்டப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரவல்லி மலைத்தொடா் விவகாரங்கள்: உச்சநீதிமன்றக் குழு கருத்துக் கேட்பு

மின்னணு சாதன உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி ரத்து: மத்திய அரசு

40 பெட்ரோகெமிக்கல் பொருள்கள் இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு: ஜூலை 15 வரை நீட்டிப்பு

டிஆா்டிஓ திட்டங்களை விரைவுபடுத்தும் நிதி அதிகாரங்களுக்கான செயல் திட்டம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



