இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலா் அனுராதா தாக்குா் தெரிவித்தாா்.
2025-26-ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதம் அல்லது ரூ.15.69 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அனுராதா தாக்குா்,‘அமெரிக்க வரி விதிப்பால் அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய சில துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை எதிா்கொள்வதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருகிறது.
கடந்த 5 காலாண்டுகளைவிட 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூனில் ஜிடிபி 7.8 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. அதேபோல் நிதிப் பற்றாக்குறை தொடா்பாக நிா்ணயித்துள்ள இலக்கு நிச்சயம் எட்டப்படும் என்றாா்.
தொடர்புடையது

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை: மத்திய அரசு
தில்லியில் வெப்ப அலை செயல் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த துணைநிலை ஆளுநா் உத்தரவு

சிறப்புப் பொருளாதார மண்டல தயாரிப்புகளுக்கு சுங்க வரி குறைப்பு!

பொருளாதார அறிக்கையும், 2047 இலக்கும்...
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


