டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக போராட்டம்!

குவாஹாட்டி, ஜம்மு, கான்பூரில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்களால் பதற்றமான சூழல்...

News image
குவாஹாட்டியில் பாஜக போராட்டம்- PTI
Updated On :31 ஆகஸ்ட் 2025, 2:09 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில், பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடியோவைச் சுட்டிக்காட்டி காங்கிரஸுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது.

அந்த விடியோவில், பிகாரில் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் ஒரு நபர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை அவமதித்து ஹிந்தியில் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி இன்று (ஆக. 31) கான்பூரில் காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்களால் பதற்றமான சூழல் நிலவியது.

அவர்களுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையில் காங்கிரஸ் தொண்டர்களும் கைகளில் தடிகளுடன் திரண்டதால் கான்பூரில் பதற்றம் அதிகரித்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் போராடிய நிலையில், பதற்றம் தணிந்தது.

அதேபோல, ஜம்முவிலும், அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியிலும் பிற இடங்களிலும் காங்கிரஸுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

summary

BJP workers protest outside Cong's Kanpur office over remarks against PM, mother

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.