விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் : சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரை!

விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் என்று மாநிலங்களவைத் தலைவராக இன்று பொறுப்பேற்றிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
1 min read

புது தில்லி: சாதாரண பின்னணியில் இருந்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சி பி ராதாகிருஷ்ணன் உயர்ந்தது ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. குடியரசு துணைத்தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக நடைபெறும் கூட்டத் தொடர் என்பதால் மாநிலங்களவையில், பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், விவசாயி மகன் சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று குடியரசு துணைத் தலைவராக உயர்ந்துள்ளார். நாட்டிற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துள்ளவர் என்று புகழாரம் சூட்டினார்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் மரியாதையைப் பேணுவார்கள் என்று நான் உங்களுக்கு இங்கே உறுதியளிக்கிறேன்.

எங்கள் தலைவர் ஒரு எளிய குடும்பத்திலிருந்து, ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர், மேலும் அவர் தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அரசியல்தான் இதற்கான ஒரு அம்சமாக இருந்து வருகிறது, ஆனால் அவரது முக்கிய நோக்கம் சமூக சேவையாக இருந்து வருகிறது. அவர் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். சமூக சேவையில் ஆர்வமுள்ள நம் அனைவருக்கும் அவர் ஒரு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்று மோடி கூறினார்.

Summary

Our Chairman comes from a simple family, a farmer's family, and he has dedicated his entire life to social service.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com