சர்வதேச தேர்தல் நிறுவனத்தின் தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியேற்றுக் கொள்ள உள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் பதவியாக இந்தப் பொறுப்பு அமைந்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “நியாயமான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடன் இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றிருப்பதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில், அதன் வெளிப்பாடாக, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக, ‘ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐ.டி.இ.ஏ)’ தலைமைப் பதவியேற்றுக்கொள்ள 37 ஜனநாயக நாடுகள் இணைந்து இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இது, அனைத்து இந்தியர்களுக்கும், அதேபோல தேர்தல் அதிகாரிகளுக்கும் பெருமிதம் அளிக்கும் தருணமாக அமைந்துவிட்டது” என்றார். இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், டிச. 3-இல் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்றுக்கொள்கிறார்.
Summary
Gyanesh Kumar assuming charge as Chairperson of International IDEA
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவராக நிதீஷ் குமார் மீண்டும் தேர்வு!
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!
தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த ஆலோசனை: ஞானேஷ் குமார்
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


