தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் பற்றி...

News image

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - SANSAD

Updated On :1 டிசம்பர் 2025, 5:46 am

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (இன்று) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்தியா-அமெரிக்கா உரசல் உள்பட வெளியுறவுக் கொள்கை சாா்ந்த பிரச்னைகள், விலைவாசி உயா்வு, வேலையின்மை, புதிய தொழிலாளா் சட்டங்கள் மற்றும் கூட்டாட்சி தொடா்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வரும் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இன்றுமுதல் டிச. 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 15 அமா்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த கூட்டத் தொடரில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் எஸ்ஐஆா் பணியை வாபஸ் பெறக் கோரி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், ‘குளிா்கால கூட்டத் தொடரின் பிற்பகல் அமா்வு எஸ்ஐஆா் விவாதத்துடன் தொடங்க வேண்டும்; இல்லையெனில், அவை இடையூறுகளுக்கு அரசே பொறுப்பு’ என்று மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், இன்று கூட்டத்தொடருக்கு முன்னதாக பேசிய பிரதமர் மோடி, ”மக்கள் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சகிள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். அவைக்குள்ளே அமளி வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

14 மசோதாக்கள்: அணுசக்தி மசோதா-2025, இந்திய உயா் கல்வி ஆணைய மசோதா, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா -2025 (காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு வழிவகுக்கும் மசோதா), தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத் திருத்த மசோதா, பெருநிறுவன சட்டத் திருத்த மசோதா, பரிவா்த்தனை சந்தைக் குறியீடு சட்ட (எஸ்எம்சி) மசோதா-2025, மத்திய கலால் சட்டத் திருத்த மசோதா-2025 (கேடு விளைவிக்கும் பொருள்களுக்கு கலால் வரி விதிக்கும் மசோதா), சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பு கூடுதல் வரி மசோதா-2025, ஜன் விஸ்வாஸ் (பிரிவுகள் திருத்தம்) மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

நடப்பு நிதியாண்டுக்கான முதல்கட்ட துணை மானியக் கோரிக்கைகளும் தாக்கலாக உள்ளன.

Summary

The winter session of Parliament has begun!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.