ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :2 டிசம்பர் 2025, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன.

மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது.

மேலும், அவரது பதிலில், ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நியாயவிலைக் கடைகள் மூலம் நாட்டில் சுமாா் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்காக, 2020 முதல் நடப்பாண்டு வரை சுமாா் 2.49 கோடி குடும்ப அட்டைகள் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளால் நீக்கப்பட்டுள்ளன.

போலி பதிவுகள், தகுதியற்ற பயனாளிகள், பயனாளிகளின் இறப்புகள் மற்றும் நிரந்தர இடமாற்றம் போன்ற காரணிகளால் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. தவறான முறையில் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாக எந்தவொரு புகாரும் அரசுக்கு வரவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.