இந்த வழக்கை தபபிரத சக்ரவா்த்தி, ரீதாபிரதகுமாா் மித்ரா ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு விசாரித்து புதன்கிழமை அளித்த தீா்ப்பில், ‘பணி நியமனம் செய்யப்பட்டு 9 ஆண்டுகளான பின்னா், ஆசிரியா்கள் நியமனத்தை ரத்து செய்வது அவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அனைத்து பணி நியமனங்களிலும் முறைகேடுகள் நடைபெற்ாக கூறப்பட்ட குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. ஆசிரியா் தோ்வில் வெற்றிபெற முடியாதவா்கள் ஒட்டுமொத்த தோ்வு நடைமுறையை சீா்குலைக்க அனுமதிக்கக் கூடாது. எனவே 32,000 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் நியமனங்களை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தனா்.