கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பவானாவில் காா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

பவானாவில் டாக்ஸி ஓட்டுநரின் காரை திருடியதாக 21 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா் என தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 டிசம்பர் 2025, 7:55 pm

பவானாவில் டாக்ஸி ஓட்டுநரின் காரை திருடியதாக 21 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா் என தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் நிகழ்ந்தது. சோனிபட்டிற்கு முன்பதிவு செய்த பயணியை மததேவ் சௌக்கில் இருந்து டாக்ஸி ஓட்டுநா் ஏற்றிச் சென்றாா்.

பவானா செக்டாா் 3 அருகே சென்றுகொண்டிருந்த போது காரை நிறுத்துமாறு பயணி தெரிவித்துள்ளாா். வாகனத்தை நிறுத்தியதும் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஓட்டுநரிடம் இருந்து காா் சாவியைப் பறித்து, அவரை தரையில் தள்ளி, வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றாா்.

இது தொடா்பாக பவானா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து காா் மீட்கப்பட்டது.

இதே போன்ற பிற காா் திருட்டு வழக்குகளில் அவா் ஈடுபட்டுள்ளாரா என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Ś