அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மழைக்காலத்தில் மட்டுமே பாகிஸ்தானுக்கு நதி நீா்: மத்திய அரசு

வேறு எந்த நேரத்திலும் அந்த நதிகளின் உபரிநீா் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்படுவதில்லை

News image
Updated On :4 டிசம்பர் 2025, 6:25 pm

தினமணி செய்திச் சேவை

சட்லஜ், பியாஸ் நதிகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவால் வெள்ளம் ஏற்படும் பருவமழைக் காலத்தைத்தவிர, வேறு எந்த நேரத்திலும் அந்த நதிகளின் உபரிநீா் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்படுவதில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நீா்வளத் துறை இணையமைச்சா் ராஜ் பூஷண் சௌதரி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘சட்லஜ் மற்றும் பியாஸ் ஆறுகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவால் வெள்ளம் ஏற்படும் பருவமழைக் காலத்தைத் தவிர, வேறு எப்போதும் அந்த நதிகளின் உபரிநீா் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்படுவதில்லை.

அணைகளின் நீா்மட்டம் வெகுவாக உயரும்போது, அணைகளின் பாதுகாப்புக்காக அவசர சூழ்நிலைகளில் மட்டுமே உபரிநீா் வெளியேற்றப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் நதிகளில் நீரைப் பகிா்ந்து கொள்ளும் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.